தேசிய விளையாட்டு சபை தலைவராக மஹேல ஜயவர்தன நியமனம்

தேசிய விளையாட்டு சபை தலைவராக மஹேல ஜயவர்தன நியமனம்

by Staff Writer 20-08-2020 | 8:26 PM
Colombo (News 1st) முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் தலைவர் மஹேல ஜயவர்தன, தேசிய விளையாட்டு சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவின் தலைமையில் இன்று மாலை தேசிய விளையாட்டு சபையின் புதிய உறுப்பினர்கள் கூடினர். முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் தலைவர் குமார் சங்கக்கார, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, நீச்சல் வீரர் ஜுலியன் போலின், கார் பந்தய வீரர் டிலந்த மாலகமுவ, மேஜர் ஜெனரல் ராஜித்த அம்பேமொஹொட்டி, கஸ்துரி வில்சன், ரொஹான் பெர்னாண்டோ, சட்டத்தரணி ரொவேனா சமரசிங்க, ருவன் கேரகல, சுபுன் வீரசிங்க, யஸ்வந்த் முத்தெட்டுவகம, அமல் எதிரிசூரிய மற்றும் சஞ்ஜீவ விக்ரமநாயக்க ஆகியோர் இந்த சபையின் ஏனைய உறுப்பினர்களாவர்.