குஷ் கஞ்சா அடங்கிய 3 பொதிகள் கைப்பற்றல்

அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட குஷ் கஞ்சா அடங்கிய பொதிகள் கைப்பற்றல்

by Staff Writer 20-08-2020 | 4:45 PM
Colombo (News 1st) அமெரிக்காவிலிருந்து பொதிகள் சேவையூடாக நாட்டிற்கு அனுப்பப்பட்ட குஷ் கஞ்சா அடங்கிய மூன்று பொதிகள் சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பொதிகளில் இருந்து 222 கிராம் குஷ் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார். அவற்றின் பெறுமதி 22 இலட்சம் ரூபாவெனவும் அவர் கூறினார். பிஸ்கட் பொதிகள் மற்றும் கிருமி ஒழிப்பு உபகரணங்களில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் , தனியார் பொதிகள் சேவை நிறுவனமொன்றில் குறித்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார். குறித்த பொதிகளில் காணப்பட்ட விலாசங்கள் போலியானவையெனவும் அவர் கூறினார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சுனில் ஜயரத்ன மேலும் தெரிவித்தார்.