by Staff Writer 20-08-2020 | 11:09 AM
Colombo (News 1st) 9 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக் கொள்வதாக இதன்போது சபாநாயகர் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, சபாநாயகரால் ஜனாதிபதியின் அறிவிப்பு வாசிக்கப்பட்டது.
இதன் பின்னர், சபை அமர்வு பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றம் பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் கூடவுள்ளது.