12வயது சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம்: ஆசிரியர் கைது

12 வயது சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம்: கணித பாட ஆசிரியர் கைது

by Staff Writer 19-08-2020 | 6:06 PM
Colombo (News 1st) 12 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கணித பாட ஆசிரியர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் கைது செய்யப்பட்டுள்ளார். தமக்கு கிடைத்த பிரத்தியேக முறைப்பாட்டிற்கமைய முன்னெடுத்த விசாரணையின் பின்னர் சந்தேகநபர் கொழும்பில் கைது செய்யப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், பேராசிரியர் முதித்த விதான பத்திரண தெரிவித்தார். 29 வயதான கணித பாட ஆசிரியரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.