சுஷாந்த் தற்கொலை வழக்கு: CBI விசாரணை

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: மத்திய புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

by Bella Dalima 19-08-2020 | 5:10 PM
பொலிவுட் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவினர் (Central Bureau of Investigation-CBI) விசாரணை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வழக்கின் அனைத்து ஆவணங்களையும் மத்திய புலனாய்வுத்துறைக்கு மும்பை பொலிஸார் ஒப்படைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 14 ஆம் திகதி பொலிவுட் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணம் தற்கொலை அல்ல எனவும் அது கொலை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.