by Staff Writer 19-08-2020 | 8:35 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சி தமது தேசியப் பட்டியலுக்கான உறுப்பினரை இன்றும் பெயரிடவில்லை.
இரண்டு தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கான ஆசனங்கள் வெற்றிடமாக இருக்கும் போதே, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு நாளை நடைபெறவுள்ளது.
நாளை காலை 9.30-க்கு பாராளுமன்றம் கூடியதும் சபாநாயகர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்.
ஜனாதிபதியினால் புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் நாளை பிற்பகல் 3 மணிக்கு வௌியிடப்படவுள்ளது.