எமது மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனம் இழுபறியில்

by Staff Writer 19-08-2020 | 8:32 PM
Colombo (News 1st) எமது மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பாக இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொள்ளும் முயற்சி இன்றும் தோல்வியில் முடிந்தது. இது தொடர்பாக வினவுவதற்காகவே கட்சியின் தலைவர் மற்றும் புதிய பொதுச் செயலாளர் இன்றும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார். எனினும், கட்சியின் முன்னாள் செயலாளரான தேரர் தொடர்ந்தும் தலைமறைவாக இருப்பதன் காரணமாக தேசியப் பட்டியல் ஆசனம் குறித்து இறுதித் தீர்மானத்தை எடுப்பது தாமதமாகிக்கொண்டே செல்கிறது. எமது மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பாக சட்ட மா அதிபரிடம் தேர்தல் ஆணைக்குழு கேள்வி எழுப்பிய ​போது, கட்சியின் ஆதரவு கிடைத்துள்ள செயலாளர் யாரென பரிசீலித்து தீர்மானிக்குமாறு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.