by Staff Writer 19-08-2020 | 7:26 PM
Colombo (News 1st) இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாடு ஒன்றை சீர்செய்வதற்காக 60,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் மன்னாரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள கணக்காளர் ஒருவரிடம் அவர் இலஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய தெரிவித்தார்.
ஒழுக்காற்று விசாரணை அறிக்கையை கொழும்பு அலுவலகத்திற்கு அனுப்பாமல் இருக்க அவர் இலஞ்சம் கோரியுள்ளதாக பத்மினி வீரசூரிய குறிப்பிட்டார்.