COVID-19 தொற்று: மேலும் 79 பேர் குணமடைந்தனர்

COVID-19 தொற்று: மேலும் 79 பேர் குணமடைந்தனர்

by Staff Writer 18-08-2020 | 5:42 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 79 பேர் இன்று குணமடைந்துள்ளனர். நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,755 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,901 பேருக்கு நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வருகை தந்த ஒருவருக்கு இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 134 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.