வௌிநாடுகளிலிருந்து 305 பேர் நாடு திரும்பினர்

வௌிநாடுகளிலிருந்து மேலும் 305 பேர் நாடு திரும்பினர்

by Staff Writer 18-08-2020 | 2:28 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 305 இலங்கை பிரஜைகள் இன்று (18) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். ஜோர்தான் மற்றும் கத்தாரிலிருந்து இவர்கள் நாடு திரும்பியுள்ளனர். கத்தாரில் வர்த்தக கப்பலில் பணி புரிந்த 20 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.40 மணியளவில் நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, ஜோர்தானின் அம்மானிலிருந்து இன்று அதிகாலை 4.35 மணியளவில் 285 இலங்கை பிரஜைகள் நாடு திரும்பினர். இன்று நாடு திரும்பிய அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்