கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2900 ஆக உயர்வு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2900 ஆக உயர்வு

by Staff Writer 18-08-2020 | 7:05 AM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,900 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (17) 7 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். ஓமானிலிருந்து நாடு திரும்பிய இருவர் இதில் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 6 பேர் நேற்றைய தினம் குணமடைந்து வீடு திரும்பினர். இதனடிப்படையில், நாட்டில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரில் 2,676 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.