English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
18 Aug, 2020 | 7:24 am
Colombo (News 1st) இறம்பொடை- வெவன்டனில் அமைந்துள்ள இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு சொந்தமான இல்லத்தில் இன்று (18) அதிகாலை தீ பரவியது.
மூன்று தலைமுறையாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த வீட்டில் இன்று அதிகாலை பரவிய தீ கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
தீ விபத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் தீ பரவியுள்ளது.
சுமார் மூன்றரை மணித்தியாலங்களின் பின்னரே தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீ பரவிய சந்தர்ப்பத்தில் நேபாள பிரஜையான காவலாளியும் வீட்டிற்கு பொறுப்பாக இருந்தவரும் மாத்திரமே வீட்டில் இருந்துள்ளனர்.
அவர்களுக்கு தீயினால் காயங்கள் ஏற்படவில்லை.
எவ்வாறாயினும், வீட்டில் இருந்த பழமையான தளபாடங்கள் அனைத்தும் தீயினால் சேதமடைந்துள்ளன.
தீயினால் ஏற்பட்ட நட்டம் தொடர்பிலும் இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை.
அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினரின் உதவியுடன் தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படவுள்ளதாக கொத்மலை பொலிஸார் கூறினர்.
01 May, 2022 | 05:15 PM
14 Apr, 2022 | 10:36 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS