பராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு

20ஆம் திகதி பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு

by Fazlullah Mubarak 17-08-2020 | 8:44 AM
Colombo (News 1st) எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள 9 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். 9 ஆவது பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளுமாறு தெரிவு செய்யப்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரினால் வர்த்தமானியில் பெயர் வௌியிடப்பட்ட 223 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 9 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு தொடர்பிலான மேலதிக தகவல்களை பாராளுமன்ற இணைத்தளத்தின் ஊடாக அறிந்துகொள்ள முடியும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.