மின் தடை: நீர் விநியோகத்திற்கு இடையூறு

மின்சார தடையினால் நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோகத்திற்கு இடையூறு 

by Staff Writer 17-08-2020 | 5:04 PM
Colombo (News 1st) 2016 ஆம் ஆண்டின் பின்னர் நாடளாவிய ரீதியில் இன்று (17) மின்சார விநியோகத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் நீர் விநியோகம் உள்ளிட்ட பல துறைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதால் நாட்டின் சில பகுதிகளில் நீர் விநியோகத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. மின்சார விநியோகம் ஆரம்பிக்கப்பட்டு 3 தொடக்கம் 5 மணித்தியாலங்களின் பின்னரே நீர் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர முடியும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. மின்சார தடை காரணமாக கொழும்பின் அனைத்து பகுதிகளிலும் வீதி சமிக்ஞை விளக்குகள் செயலிழந்துள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படுவதாக வீதி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரிவிற்கான பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்