நியூஸிலாந்தில் பொதுத் தேர்தல் பிற்போடப்பட்டது

நியூஸிலாந்தில் பொதுத் தேர்தல் பிற்போடப்பட்டது

by Fazlullah Mubarak 17-08-2020 | 8:49 AM

நியூஸிலாந்தில் பொதுத் தேர்தல் பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் 17 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டின் பிரதமர் ஜெஸிந்தா ஏர்டன் தெரிவித்துள்ளார். நியூஸிலாந்தில் செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்துவதற்கு திகதி குறிப்பிடப்பட்டிருந்தது. முன்னதாக கொரோனா தொற்று நிலைமை காரணமாக பாராளுமன்றத்தைக் கலைக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஏர்டன் கடந்த வாரம் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஒக்டோபர் 17 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டின் பிரதமர் ஜெஸிந்தா ஏர்டன் தெரிவித்துள்ளார். அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியும் தேர்தலைப் பிற்போடுமாறு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.