முன்னாள் ஜனாதிபதிக்கு PCoL பொலிஸ் பிரிவு அழைப்பு

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு 

by Staff Writer 17-08-2020 | 4:24 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி ஆணைக்குழுவிலுள்ள பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உயர் அதிகாரிகள் பலரும் இதற்கு முன்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியுள்ளனர்.