by Fazlullah Mubarak 17-08-2020 | 8:24 AM
சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலை, பூசா சிறைச்சாலைக்கு விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, 21 உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் 15 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிரான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நிர்வாக ரீதியிலான உதவிகளை வழங்கும் மற்றும் அநாவசிய தொடர்புகளை பேணும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.