by Staff Writer 16-08-2020 | 8:49 AM
Colombo (News 1st) கடல் மார்க்கமாக நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட மன்டி (MANDY) எனப்படும் செயற்கை போதைப்பொருளுடன் அம்பலாங்கொடையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 12 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவை 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடையவை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.