வௌிநாடுகளிலிருந்து 342 பேர் தாயகம் திரும்பினர்

வௌிநாடுகளிலிருந்து 342 பேர் தாயகம் திரும்பினர்

by Staff Writer 16-08-2020 | 12:01 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் காரணமாக வௌிநாடுகளில் தங்கியிருந்த 342 பேர் இன்று (16) அதிகாலை நாடு திரும்பினர். இவர்கள் கட்டுநாயக்க மற்றும் மத்தளை விமான நிலையங்களை வந்தடைந்தனர். ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 34 பேரும் கத்தாரில் சிக்கியிருந்த 22 பேரும் இன்று காலை நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார். இதனை தவிர, ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 286 பேர் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்தின் முகாமையாளர் குறிப்பிட்டார். இன்று நாடு திரும்பிய அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், கண்காணிப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.