நாட்டில் 2890 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 2890 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 16-08-2020 | 6:53 AM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,890 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (15) நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. துருக்கியிலிருந்து நாட்டிற்கு வந்த வௌிநாட்டு பிரஜையொருவருக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பி இருவருக்கும் மாலைதீவிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் COVID - 19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 08 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். அதற்கமைய நாட்டில் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,666 ஆக அதிகரித்துள்ளது.