வெள்ளவத்தையில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

வெள்ளவத்தையில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 15-08-2020 | 3:57 PM
Colombo (News 1st) கொழும்பு - வௌ்ளவத்தை, ரொக்சி பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். காலியிலிருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலொன்றில் இன்று அதிகாலை இவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார். வௌ்ளவத்தையில் வசித்த 56 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர். உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வௌ்ளவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.