சிறைக்கைதிகளை பார்வையிட இன்று முதல் சந்தர்ப்பம்

சிறைக்கைதிகளை பார்வையிட இன்று முதல் சந்தர்ப்பம்

by Staff Writer 15-08-2020 | 3:19 PM
Colombo (News 1st) சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு இன்று முதல் சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். அனைத்து சிறைச்சாலைகளிலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கைதிகளை பார்வையிடும் நடவடிக்கை கடந்த மாதம் 11 ஆம் திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளங் காணப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலைமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.