கொழும்பின் சில பகுதிகளில் இன்றிரவு நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் இன்றிரவு நீர்வெட்டு

by Staff Writer 15-08-2020 | 3:25 PM
Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் இன்றிரவு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்றிரவு 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பு 11 மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளில், குறித்த காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது. கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் குடிநீர் திட்ட சீரமைப்பினால் நீர் விநியோகம் தடைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.