கொரோனாவிலிருந்து 8 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்று: 8 பேர் குணமடைந்தனர், 209 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெறுகின்றனர்

by Staff Writer 15-08-2020 | 4:14 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 08 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,666 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,886 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 209 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். இதேவேளை, கொரோனா நோயாளர்களை அடையாளம் காணபதற்காக நாட்டில் 1,82,681 PCR சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக COVID-19 தொற்று தடுப்பிற்கான தேசிய செயற்றிட்ட மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நேற்று மாத்திரம் 1100 பேருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.