இலங்கையில் கடற்கரை விளையாட்டு விழா: அலைச் சறுக்கலில் ஈடுபட்ட நாமல் ராஜபக்ஸ

by Staff Writer 15-08-2020 | 7:33 PM
Colombo (News 1st) இலங்கையில் கடற்கரை விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் நோக்கில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரை விளையாட்டு விழா, இரண்டாவது நாளாக ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்றது. ஹம்பாந்தோட்டை கடற்கரைப் பூங்காவில் இந்த விளையாட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாடசாலை மற்றும் விளையாட்டுக் கழகங்கள் சார்பாக வீர, வீராங்கனைகள் போட்டியிடுகின்றனர். விளையாட்டு விழாவின் முதல் நாளான நேற்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார். கடற்கரை கரப்பந்து, கடற்கரை கால்பந்து மற்றும் கடல் அலை சறுக்கல் விளையாட்டுக்கள் இதன்போது நடத்தப்பட்டன. இன்று காலை அங்கு சென்ற விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ கடல் அலைச் சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டார்.