by Staff Writer 14-08-2020 | 4:23 PM
Colombo (News 1st) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்விற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 20 ஆம் திகதி முற்பகல் 09.30-க்கு 9 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஆரம்பமாகவுள்ளது.
இதன்போது, புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாக அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது