ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் ரணிலுடன் சந்திப்பு; ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க மறுப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் ரணிலுடன் சந்திப்பு; ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க மறுப்பு

எழுத்தாளர் Bella Dalima

12 Aug, 2020 | 8:15 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் சிலர் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை இன்று மீண்டும் சந்தித்தனர்.

கொள்ளுப்பிட்டி, 5 ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

பேச்சுவார்த்தையில் பங்கெடுக்க ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் எவரும் அங்கு எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்தோ, பேச்சுவார்த்தை பற்றியோ ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்