220 இலங்கை பிரஜைகள் நாடு திரும்பினர்

வௌிநாடுகளிலிருந்து 220 இலங்கை பிரஜைகள் நாடு திரும்பினர்

by Staff Writer 11-08-2020 | 3:39 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் சிலர் இன்று நாடு திரும்பினர். வௌிநாடுகளிலிருந்து 220 இலங்கை பிரஜைகள் நாடு திரும்பியதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார். QR 668, UL 218 ஆகிய விசேட விமானங்களின் மூலமே அவர்கள் நாடு திரும்பியுள்ளனர். தோஹாவிலிருந்து இன்று அதிகாலை 43 பேர் நாடு திரும்பியதுடன், இன்று முற்பகல் ஜெர்மனியிலிருந்து ஒருவர் நாட்டை வந்தடைந்தார். இதேவேளை, இன்று நண்பகல் 12.20 அளவில் மாலைத்தீவிலிருந்து 178 பேர் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தனர். இன்று நாடு திரும்பிய அனைவருக்கும் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு, அவர்கள் கண்காணிப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.