மேல் மாகாணத்தில் போதைப்பொருட்களுடன் 417 பேர் கைது

மேல் மாகாண சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் 417 பேர் கைது

by Staff Writer 11-08-2020 | 2:19 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் 417 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயினுடன் 182 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கஞ்சாவுடன் 94 பேரும் ஐஸ் போதைப்பொருளுடன் 17 பேரும் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் ஆலோசனையின் பேரில் நேற்று (10) காலை 6 மணி முதல் இன்று (11) காலை 5 மணி வரை சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.