உறுப்பினர்களை 15-க்கு முன்னர் பதியுமாறு அறிவித்தல்

பாராளுமன்றுக்கு தெரிவானோரை 15ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவித்தல்

by Staff Writer 11-08-2020 | 9:26 AM
Colombo (News 1st) பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு பாராளுமன்றம் அறிவித்துள்ளது. இந்த பதிவு நடவடிக்கைகள் Online மூலமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார். இதன்மூலம் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வருகை தராது, தமது பெயரை பதிவு செய்து கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார். தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் கல்வித் தகைமை, தொழில் தகைமை, நிழற்படம் மற்றும் சமயம் ஆகியன தொடர்பில் தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளன. www.parliament.lk எனும் இணையத்தள முகவரியினூடாக புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள முடியும் என பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.