கொரோனா தொற்று: மேலும் 29 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்று: மேலும் 29 பேர் குணமடைந்தனர்

by Staff Writer 11-08-2020 | 3:29 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 29 பேர் குணமடைந்துள்ளனர். இதனடிப்படையில், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,622 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுடன் 2,871 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 238 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.