மாத்தளை - கண்டி இடையிலான ரயில் சேவை இடைநிறுத்தம்

மாத்தளை - கண்டி இடையிலான ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம் 

by Staff Writer 10-08-2020 | 2:47 PM
Colombo (News 1st) மாத்தளை - கண்டி நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கட்டுகஸ்தோட்ட மற்றும் வத்தேகம பகுதிகளுக்கிடையிலான ரயில் மார்க்கத்தில் சடலமொன்று காணப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இரண்டு ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.