குருநாகல் மக்களுக்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு

குருநாகல் மக்களுக்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு

by Staff Writer 10-08-2020 | 8:27 PM
Colombo (News 1st) குருநாகல் மாவட்ட மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நன்றி தெரிவித்து அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தனது அரசியல் மிகவும் நெருக்கடியான காலத்தில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட போது மாவட்ட மக்கள் வழங்கிய ஆதரவை பிரதமர் நினைவுபடுத்தியுள்ளார். குருநாகல் மாவட்ட மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை மற்றுமொரு அரசியல் மேடையில் உறுதி வழங்கும் அளவிற்கு வைக்காமல் அவற்றை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். குருநாகல் மாவட்டத்திற்கு மாத்திரம் மட்டுப்படாமல், இலங்கையில் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் எதிர்பார்க்கும் அமைதியான மற்றும் சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு தற்போது தன்முன் உள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரிகளில் ஒருவரான காமினி செனரத் மீண்டும் பிரதமரின் செயலாளாராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது நியமனக் கடிதத்தை இன்று (10) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

ஏனைய செய்திகள்