by Bella Dalima 07-08-2020 | 5:51 PM
Colombo (News 1st) தேர்தலுக்கு பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுவரை எவ்வித வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லையென தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நடமாடும் சேவைகளும் தொடர்ந்தும் கடமையில் உள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டார்.