காற்றின் ​வேகம் அதிகரிக்கலாம் என அறிவுறுத்தல்

காற்றின் ​வேகம் அதிகரிக்கலாம் என அறிவுறுத்தல்

by Staff Writer 07-08-2020 | 2:59 PM
Colombo (News 1st) காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், கொழும்பு, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, பேருவளை தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் கடல் அலை 2 தொடக்கம் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.