வாக்குச்சீட்டை நிழற்படம் எடுத்தமை: விசாரணை CIDக்கு

வாக்குச்சீட்டை நிழற்படம் எடுத்தமை தொடர்பான விசாரணை CID இடம் ஒப்படைப்பு 

by Staff Writer 06-08-2020 | 12:07 PM
Colombo (News 1st) பொதுத் தேர்தலில் புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டினை நிழற்படமெடுத்து அல்லது காணொளியாக பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியமை தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான இரண்டு சம்பவங்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை தவிர, தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் சமூகவலைத்தளத்தை பயன்படுத்தியமை தொடர்பில் 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.