கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் கொலை

கேகாலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் கொலை

by Staff Writer 06-08-2020 | 11:01 AM
Colombo (News 1st) கேகாலை நகரிலுள்ள சந்தைத் தொகுதியொன்றில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கேகாலை நகரைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.