by Chandrasekaram Chandravadani 05-08-2020 | 1:54 PM
Colombo (News 1st) இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது.
வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்று வருகின்ற நிலையில், நண்பகல் 12 மணி வரை பதிவாகிய வாக்களிப்பு வீதம் பின்வருமாறு:
கொழும்பு : 42 வீதம்
கண்டி : 45 வீதம்
மொனராகலை : 40 வீதம்
குருணாகல் : 40 வீதம்
நுவரெலியா : 48 வீதம்
புத்தளம் : 35 வீதம்
மாத்தறை : 44 வீதம்
திகாமடுல்ல : 40 வீதம்
திருகோணமலை : 40 வீதம்
யாழ்ப்பாணம் : 35 வீதம்
மாத்தளை : 60 வீதம்