by Staff Writer 04-08-2020 | 5:22 PM
Colombo (News 1st) உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சிரேஷ்ட அதிகாரிகள் மூவர், பூசா, அங்குனுகொலபெலஸ்ஸ, நீர்கொழும்பு மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறையின் அத்தியட்சகர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினால் இந்த பாதுகாப்பு நடைமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.