வாக்குப்பெட்டிகளை கொண்டுசெல்லும் நடவடிக்கை 8 முதல்

வாக்குப் பெட்டிகளை கொண்டுசெல்லும் நடவடிக்கை நாளை காலை 8 முதல்...

by Staff Writer 03-08-2020 | 6:40 PM
Colombo (News 1st) பொதுத் தேர்தலுக்காக வாக்குப் பெட்டிகளை கொண்டுசெல்லும் நடவடிக்கை நாளை (04) காலை 8 மணி முதல் இடம்பெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள மற்றும் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு தேர்தல் தினத்தில் பிற்பகல் 4 மணி முதல் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5ஆம் திகதி காலை 7 மணி முதல் பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பை ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். 12,995 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதுடன், ஒரு கோடியே 62 இலட்சம் பேர் இம்முறை தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அத்துடன் 7,452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  

ஏனைய செய்திகள்