by Staff Writer 02-08-2020 | 5:02 PM
Colombo (News 1st) களுத்துறை சிறைச்சாலை கைதிகள் மூவர் இன்று (02) அதிகாலை தப்பிச்சென்றுள்ளனர்.
அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பிச்சென்ற கைதிகள் மூவரும் மக்கொன, கல்பாத மற்றும் களுத்துறை தெற்கு பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
மேலும் இரு கைதிகளைத் தேடி சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.