ஷானி அபேசேகரவிற்கு 7 ஆம் திகதி வரை விளக்கமறியல்

ஷானி அபேசேகரவிற்கு 7 ஆம் திகதி வரை விளக்கமறியல்

by Staff Writer 01-08-2020 | 4:17 PM
Colombo (News 1st) கைது செய்யப்பட்டுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்றிரவு கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2013 இல் பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட வாஸ் குணவர்தன உள்ளிட்டோருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் போது உண்மைக்குப் புறம்பான விடயங்களை நீதிமன்றத்தில் முன்வைத்ததாக ஷானி அபே​சேகர மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கிணங்க கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (31) அவர் கைது செய்யப்பட்டார்.