வீடொன்றிலிருந்து 5கோடியே 80இலட்சம் பணம் கைப்பற்றல்

தெமட்டகொடை வீடொன்றிலிருந்து 5 கோடியே 80 இலட்சம் பணம் கைப்பற்றல்

by Staff Writer 01-08-2020 | 3:38 PM
Colombo (News 1st) தெமட்டகொடையில் வீடொன்றில் இருந்து 140,000 அமெரிக்க டொலர் உள்ளிட்ட 5 கோடியே 80 இலட்சத்திற்கும் அதிகத் தொகை பணத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு பிராந்திய விசேட வீதித்தடுப்பு பொலிஸ் வீதித்தடை பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் வசமிருந்த 4 கிராம் நிறையுடைய ஹெரோயினும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 55 வயதுடைய சந்தேகநபர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.