தனிமைப்படுத்தப்பட்டிருந்த 166பேர் வீடு திரும்பினர்

இயக்கச்சியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 166 பேர்  வீடு திரும்பினர் 

by Staff Writer 31-07-2020 | 6:36 PM
Colombo (News 1st) ஜோர்தானிலிருந்து நாடு திரும்பி, இயக்கச்சி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 166 பேர் அங்கிருந்து வீடு திரும்பியுள்ளனர். ஜூலை மாதம் 16 ஆம் திகதி ஜோர்தானிலிருந்து நாடு திரும்பிய 166 பேர் இயக்கச்சி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் 153 பெண்களும் 13 ஆண்களும் அடங்குவர். யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி, மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்களுக்கான மருத்துவ சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.