by Staff Writer 30-07-2020 | 11:42 AM
Colombo (News 1st) வாரியபொல சிறைச்சாலை அதிகாரி ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வாரியபொல சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் கூறினார்.