கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

கொழும்பின் பல பகுதிகளில் இன்று நள்ளிரவு வரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

by Staff Writer 30-07-2020 | 5:27 PM
Colombo (News 1st) கொழும்பின் பல பகுதிகளில் இன்று நள்ளிரவு வரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. கொழும்பு - 01, 02, 03, 07, 08, 09, 10, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளுக்கே குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் கசிவு காரணமாக குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.