Colombo (News 1st) குருநாகல் தொல்பொருள் கட்டடம் தகர்க்கப்பட்டமை தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
இந்த அழிவு குறித்து கருத்து வெளியிட்ட தொல்பொருளியல் சக்கரவர்த்தி எல்லாவல மேதானந்த தேரர், பொறுப்புக் கூற வேண்டியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
அவர் தற்போது கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் உரிமைகளை முகாமைத்துவப்படுத்தும் ஜனாதிபதி செயலணி உறுப்பினராக செயற்படுகின்றார்.
தொல்பொருள் கட்டடத்தை தகர்த்தமை இனத்திற்கு செய்த பாரிய மோசடியென அவர் சுட்டிக்காட்டினார்.
அவற்றை மீளக் கட்டியெழுப்பினாலும் அவை புதிய நிர்மாணமாக அமையுமே ஒழிய, மரபுத்தன்மை ஏற்படாது என அவர் குறிப்பிட்டார்.
இதனை செய்த நபராக நகர மேயர் கூறப்படுகிறார். அந்த நபருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தி கட்டாயமாக அவருக்கு நமது நீதிமன்ற கட்டமைப்பிற்கு அமைவாக, தொல்பொருள் சட்டத்தின் பிரகாரம் உரிய தண்டனை விதிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் எமக்குள்ள இந்த ஏனைய சகல தொல்பொருள் சொத்துக்களையும் இடித்து அழிப்பதற்கான சாத்தியம் உள்ளது
என எல்லாவல மேதானந்த தேரர் கூறினார்.