English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
30 Jul, 2020 | 9:09 am
Colombo (News 1st) பொதுத் தேர்தலை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக நாளை (31) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நாளை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இந்த விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5,300 பஸ்கள் குறித்த நாட்களில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனை தவிர, மாகாணங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து அதிகார சபையிடமுள்ள 600 பஸ்களும் இந்த சேவையில் ஈடுபடவுள்ளன.
இதற்காக தற்காலிக போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுப் போக்குவரத்து சேவையில் ஏற்படும் நெரிசல்களை குறைப்பதற்காக இவ்வாறான விசேட போக்குவரத்து சேவை நடவடிக்கைககள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
24 Jan, 2021 | 07:30 PM
22 Jan, 2021 | 03:08 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS