யாழில் மக்கள் சக்தி மக்கள் அரண் அங்குரார்ப்பணம்

யாழில் மக்கள் சக்தி மக்கள் அரண் அங்குரார்ப்பணம்

by Staff Writer 29-07-2020 | 10:31 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில் 'மக்கள் சக்தி மக்கள் அரண்' அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மக்கள் சக்தி மக்கள் அரண் அங்குரார்ப்பண பொதுக்கூட்டம் யாழ். தென்மராட்சி, இராமாவில் J/320 கிராமத்தில் நேற்று (28) நடைபெற்றது. நியூஸ்ஃபெஸ்டின் அலுவலக செய்தியாளர் ஸ்டீபன் செல்வநாயகம் லெனிங்டன் லியோராஜ், பிராந்திய செய்தியாளர் கதிர்காமத்தையன் ரஜனிகாந்தன் ஆகியோரின் தலைமையில் இந்த அங்குரார்ப்பண பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதன்போது, மக்கள் சக்தியின் மக்கள் அரண் தலைவராக ஜீவரட்ணம் கபில்ராஜூம் செயலாளராக ஐ.மோகனதாஸூம் பொருளாளராக சு.சண்முகமும் உப தலைவராக ஞானலிங்கம் திலகராணியும் உப செயலாளராக சிவகுமார் சுமித்திரியும் தெரிவு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் பொது பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.​