செயற்றிறன் மிக்க அரச சேவையை ஸ்தாபிப்போம் 

செயற்றிறன் மிக்க அரச சேவையை ஸ்தாபிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 29-07-2020 | 6:18 PM
Colombo (News 1st) ஊழல் மற்றும் மோசடிகளை நிறுத்தி செயற்றிறன் மிக்க அரச சேவையை ஸ்தாபிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். 15 இலட்சத்திற்கும் அதிக அரச ஊழியர்கள் நாட்டில் காணப்படுகின்ற போதிலும், தமக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்குவது குறித்து நாளாந்தம் முறைப்பாடுகள் பதிவாவதாக ஜனாதிபதி கூறினார். இலஞ்சம், ஊழல் மோசடி ஆகியவற்றை இல்லாதொழித்து மக்களுக்கான அர்ப்பணிப்புடன் சேவையாற்றக்கூடிய அரச சேவையை உருவாக்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். களுத்துறை மாவட்டத்திற்கு சென்றிருந்த போதே ஜனாதிபதி இந்த விடயங்களைக் கூறினார்.

ஏனைய செய்திகள்